வியாழன், டிசம்பர் 09, 2010

௭ன்னவனுக்காக…..


உன் கண்களை நேராய் சந்திக்கத்
துடிக்கும் என் கண்கள் - தானாய்
அலைபாயும் உன் முச்சு காற்றை
மிக அருகில் சுவாசித்த உடனே ..

உன் தோள் சேர த்துடிக்கும் என் தோள்கள்
தானாய் தடுமாறும் உன் சட்டை பட்டனை
மிக அருகில் சந்தித்த உடனே..

உன் கை கோர்கத் துடிக்கும் என் கைகள்
தானாய் தடுமாறும் உன் மோதிரத்தின் ஸ்பரிசம்
பட்ட உடனே..

ஏதேதோ பேசத்துடிக்கும் ௭ன் இதழ்கள்
தானாய் தடுமாறும் 'ஏதாவது பேசுடி’
௭ன்று சொல்லும் உன் செல்லத் திட்டலில்..

என் உணர்வுகளோடு போராடி
தினம் தினம் தோற்றுப் போகிறேனே…
நீ மட்டும் எப்படி என்னை வெல்கிறாய் ??? !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக