சனி, பிப்ரவரி 18, 2012

பந்தயக்குதிரைகள் நாங்கள்..!!


"Life is a race.. run, run , run.." என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்குதிரைகள் தான் நாங்கள்.

நாங்கள்? சொகுசான வேலைகளை விடுத்து பகட்டான வேலைக்கு ஏங்கும்/அலையும்/திரியும்  முதுகலைப்பட்டதாரிகள். எங்களுடைய இலக்கெல்லாம் ஒன்றே. வருகின்ற நேர்முகத்தேர்வுகளில் கையில் ஒரு (ஒரே ஒரு) வேலை.

"என் பொண்ணு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்" என்ற பெருமையை என் அப்பா விற்கும், "என் பொண்ணு சாதித்து விட்டாள்" என்ற பூரிப்பை என் அம்மாவிற்கும், "இனி ஆசைபட்டவற்றை எல்லாம் அக்கா விடம் கேட்கலாம்" என்ற உரிமையை தம்பிக்கும் தர நிச்சயம் ஒரு வேலை வேண்டும்.

"பேத்தி என்ன வேலை செய்கிறாள்?" என்ற கேள்வியின் பதிலுக்காகவே, கோரக்காட்டுப்புதூரில் வசிக்கும் என் அய்யா வும், ஆத்தாவும், பருத்திக்கொட்டம் பாளையத்தில் வசிக்கும் என் அப்பச்சியும் அம்மாயும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், "கம்ப்யூட்டர் கம்பெனி",  என்று.



விடுதிக்குக்ளேயே வெட்டிக்கதை பேசியபடி போகும் காலை நடை பயிற்சியிலிருந்து, காலையில் நடை போகும் பொது வாகனங்கள், நெரிசல் இல்லாத சாலை அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரபரப்பாக சுழலும் விந்தையை இரசிக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளில் ஓரளவேனும் என் அம்மாவிற்கு தெளிவு படுத்த வேண்டும்.

Income tax, Recession, Inflation என்று நானும் கொஞ்சம் உலக பொருளாதாரத்தை அலச வேண்டும்.

கல்விக்கடனை விரைவில் கட்ட வேண்டும். அப்புறம், வருமான வரி கட்ட வேண்டும். வரிக்கழிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.


பண்டிகைக்கால விடுமுறைக்கு ஊர் திரும்ப இரயிலிலும், K.P.N Travels சிலும் டிக்கெட் முன்பதிவிற்கு அலைய வேண்டும். இன்னும் எக்கச்சக்கமாய் ஆசைகள், கனவுகள், (வெட்டிக்) கற்பனைகள்.

மேற்கண்டவைகளில் ஒன்றிரண்டாவது நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.. உழைக்கிறோம??

நாளை துறைத்தலைவரிடம் வாங்கப்போகும் வசவுமொழிகள், நாளை மறுநாள் நடக்க இருக்கும் மாதிரி நேர்முகத்தேர்வு, தோழியின் பிறந்த நாள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பணங்கள், வேகாத தோசை, குழைந்த சேமியா... எதைச்சொல்ல எதை விட..??


எனது காலைப்பொழுதின் முதல் ஒரு மணி நேரத்திற்காக காலை நடைப்பயிற்சியும், தடிமனான புத்தகங்களும் போட்டி போட, இறுதியில் சோம்பலே வெல்லும். அவசரக்கதியில் கிளம்பி Servlet, Server களோடு முட்டி மோதி, Semantic Web டோடு போராடி, UML, VC++.. கடவுளே.. 4  மணிக்குப் பிறகு Data Structures, DBMS, Operating Systems, Networking, Verbal, Non-Verbal, Aptitude, Soft Skills... ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா.. யாருப்பா இந்த R. S. Aggarwal.?? கடுப்பேத்தறாங்க மை லார்ட்.. :(





Shame Shame ஆ இருந்த வகுப்பு அறிவிப்பு பலகை கூட, இப்போதெல்லாம் எங்களைப்பார்த்து கலர் கலர் ராய் சிரிக்கிறது..


இது மட்டுமா?? Certifications, extra-credit, Paper Presentation, Seminar, Conference.. கூட்டுக் குடும்ப  மளிகை கடை லிஸ்ட் மாதிரி முடியவே முடியாது. 


இவற்றிற்கு நடுவில், யு டியூபில் சரவணன்-மீனாட்சி, புதிதாய் வர இருக்கும் சூர்யா-ஜோதிக காபி விளம்பரம், போத்திஸ் இன் புதிய சல்வார்கள், சிவகார்த்திகேயன் புது படம், ஆர்யா வின் அடுத்த பட முன்னோட்டம், யுவனின் புது ஆல்பம், சமீபத்திய கிசு கிசுக்கள், ப்ளாக் பதிவுகள், Facebook/G+ status update, Antivirus update, இதுக்கு நடுவில் எங்கள் அறிவை வேறு அப்டேட் பண்ணனுமாம்.. "ஆத்தா சத்தியமா நான் பாஸ் ஆகமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.."


இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சும் கிடைக்கவில்லையே என்றால்,  interview இல் வேலை என்பது 'அதிஷ்டம்' இருந்தால் மட்டும் என்பார்கள் பாருங்க.. டென்ஷன் ஏ ஆகாது.. இதை முதலிலேயே சொல்லியிருந்தால் தாயத்தோ, மோதிரமோ, தங்கப்பல்லோ, ராசிக்கல்லோ முயன்று பார்த்திருப்போம். பிரேம்ஜி பாணியில் சொல்லணும் னா, "என்ன கொடும சார் இது..??!!", சிம்பு பாணியில் சொல்லணும் னா, "என்ன வாழ்க்க டா இது.."



கடவுளே, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், என்னை கம்ப்யூட்டர் ஆகக்கூட படைத்து விடு, கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனாக மட்டும் படைத்து விடாதே.. போதும் டா சாமி..



ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ரோமியும் செல்லாவும்

தலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள் ஊரில் செல்லப் பிராணிகள்  என்றால் புசு புசு பொம்மறேனியன் நாய்க்குட்டியும், விரைப்பான ஜெர்மன் செபெர்ட் ம், கலர் கலர் லவ் போர்ட்ஸ் ம் அல்ல. குறும்பான துடிப்பான நாய்க்குட்டிகள், பாவமாக பாவனை செய்யும் மாடுகள், சோம்பேறித்தனமாக திரியும் எருமை கள் , தலையை ஆட்டி ஆட்டி வேடிக்கை பார்க்கும் ஆடுகள், தன் தாய் அசந்த நேரத்தில் எருமைகளை சீண்டும் ஆட்டுக்குட்டிகள், காலை நேர உற்சாகத்தில் காலை உணவை கடன் கேட்கும் பூனைகள், தன் குஞ்சுகள் புடை சூழ காலை நடை போகும் கோழிகள், கோழிகளுக்கு போட்டியாக தானியங்கள் பொறுக்கும் புறாக்கள்.. இப்படி பிராணிகளுக்கு பஞ்சமே இல்லை.

சூர்யா & சூர்யாவின் தோழன் 

எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு நிச்சயம் நாய்கள் இருக்கும். Pedigree யும் சுகுணா சிக்கனும் சாப்பிட்டு சோபா வில் தூங்குபவைகள் அல்ல, கெட்டித்தயிர் சாதமும், வார வாரம் நாட்டுக்கொழித்துண்டுகளும் சாப்பிட்டுவிட்டு கட்டுத்தறியில் சாக்குப்படுக்கை மேல் சொகுசாகவும் விசுவாசமாகவும் வளர்ந்தவைகள். முன்னெல்லாம் நாய்க்கு சாப்பிடவென்றே வருட வருடம் குயவர்களிடம் சொல்லி ஒரு மண் தட்டு வாங்கி வைக்கப்படும். இன்றைய தினங்களில் மண் சட்டிகள் பிளாஸ்டிக் குண்டாக்களாகவும் பீங்கான் குண்டாக்களாகவும் மாறிவிட்டன. எங்க வீடு நாய் சாப்பிடும் குண்டா நான் ஏழாம் வகுப்பில் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. எங்கள் வீடு செல்ல நாயின் பெயர் ரோமி. இதற்கு பெயர் வைத்த காரணமே சுவாரஸ்யமானது. என் தம்பி சூர்யா, முதல் வகுப்பு படிக்கும் போது, அவனது ஆங்கிலப் புத்தகத்தில் 'நட்டி' என்ற ஒரு நாயைப் பற்றிய பாடம் இருக்கும். அதன் நினைவாக நட்டி என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று, அதன் காதில் 3 முறை 'நட்டி' என்று சொல்லி வெற்றிகரமாக பெயர் சூட்டினோம். அதில் ஒரு சிக்கல். எங்கள் ஆத்தாவிற்கு(அப்பாவின் அம்மா) அந்தப் பெயர் வாயில் நுழையவே இல்லை. பிறகு தான் 'ரோமி' என்று பல முறை காட்டு கத்தல்  கத்தி   பெயரை மாற்றி வைத்துட்டோம்.இதுவும் நுழைய வில்லை.  அவர் மட்டும் தனியாக 'மணி' என்று  கூப்பிட்டுக்கொள்கிறார். அவரது பெண் வயிற்றுப் பேத்தி வைத்ததாம். நாங்களும் ஆரம்பத்தில் மணி என்று அழைத்துப்பார்த்து குலைத்தால் அடித்தும் மிரட்டியும்  கூட பார்த்து விட்டோம், மணி என்றாலும் குலைக்கிறான், ரோமி என்றாலும் குலைக்கிறான். எங்கள் ரோமி குளிப்பதேன்னவோ  dove ஷாம்பூ, சந்திரிகா சோப்-ல் தான். ஹீரோ தான், ஆனால் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஸீன் போடும். கழுத்தில் பெல்ட் கட்டி , போஸ்டர் கலர் ல் பொட்டு வைப்பது என்று பயங்கர அலப்பறை நடக்கும். வருடா வருடம் பிறந்த நாள்  மிட்டாயிலிருந்து, நான் ட்ரையல் பார்க்கும் புதுப்  புது ஐட்டம் வரை நிச்சயம் ரொமிக்கு பங்கு உண்டு. (கவனிக்க: ருசி பார்ப்பதில் மட்டும்) 

ரோமி


அடுத்தது  பூனை. எங்கிருந்தோ வந்து எங்கள் வீ(கூ)ட்டில் அடைக்கலமாகி இருக்கும் ஜீவன். எனக்கு பூனையும் பேயும் ஒன்றுதான். அவ்ளோ பயம். அசகாய சூரன். ஒரே நேரத்தில் 5 மயில்கள்  கொண்ட கூட்டத்தையே அசால்டாக விரட்டும் புலி. அடிக்கடி பால், தயிராய் திறமையாகத் திருடி எங்கள் சாபத்தை பெற்று வரும் திருட்டுக்கள்ளி. 

குழந்தைகள் போல் அழகாய், சமத்தாய் இருக்கும் கன்று குட்டிகள். கொள்ளை அழகு. 3 கன்று குட்டிகள் இருந்தாலும், ஒருவர் குடித்த தண்ணீர் வாளிகளில்  மற்றவர்கள் குடிக்க மாட்டனர். அவளவு சுத்தமாம். எங்கள் அத்தை வீட்டில் தான் ஒவ்வொரு கன்று குட்டி, ஆடு, மாடுகளுக்குக்கூட பெயர் வைத்திருப்பார். சிகப்பி, செல்லா, மண்டையன், கிறுக்கி, கருப்பன், வள்ளி ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ காரணம் இருக்கும்.

ரோமியே தான் 
                                 
சிறு வயதில்  விளையாட்டிற்காக நாங்களும் தோட்டத்தில் புல் பறித்து விளையாடுவதுண்டு. மிஞ்சிப்போனால் கால் சாக்கு கூட தேறாது. அதையே ஒரு கைப்பிடியாவது அனைத்து ஜீவன்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதிலேயே சந்தோசம் அடைவோம். குடும்ப அட்டையில் இல்லாதது ஒன்று தான் குறையே ஒழிய, மற்ற படி எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் உறுப்பினரே. மாட்டுப்பொங்கல் தினத்தில்  மட்டுமல்ல என்றுமே எங்கள் நாயகர்கள் இவர்களே.

நான் கண்ணாடி போட்டுக்கொண்டு போனால் முட்டும் செவலை மாட்டிற்கும், வீட்டில் முதல் ஆளாய் வரவேற்கும் ரோமிக்காகவும்  சிறப்பு சமர்ப்பணம்.