வியாழன், ஆகஸ்ட் 20, 2009

விழி மூடி யோசிக்கிறேன் ...

உனக்காகவே வளர்ந்து விட்ட என் விரல் நகங்கள் ...

உனக்கான என் முத்தங்களை சுமந்த நீ தைத்த சட்டையின் பொத்தான்....

என் பிடியில் சிக்கி தவிக்கும் உன் மூச்சு காற்றை சுமந்த என் தலையணை..

குளியல் அறையில் இருந்தும் சமையல் அறையில் இருந்தும் நீ எனக்கு அனுப்பிய ரகசிய குறுந்தகவல்கள் .....

இவை யாவும்
அந்நிய காற்றில் கரையாதிருக்க...
அடிக்கடி சிணுங்கும் என் கைபேசி உன் குரலிலேயே ....

இப்படி நீயும் உன் நினைவுகளும் மாறி மாறி என்னை ஆக்ரமிக்க
அந்நிய தேசத்தில் என்ன செய்வேன் நான் ??????