நைசாக வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி..
அதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..
அதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..
உன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற
இளமாட்டுக்கன்று..
தனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..
இது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...
மறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக
பார்க்கும் சங் கு பூக்கள்..
போனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு
போயிருக்கும் கிளிக்கூட்டங்கள்..
கத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..
செங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..
பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..
எனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..?!
அதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..
அதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..
உன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற
இளமாட்டுக்கன்று..
தனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..
இது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...
மறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக
பார்க்கும் சங் கு பூக்கள்..
போனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு
போயிருக்கும் கிளிக்கூட்டங்கள்..
கத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..
செங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..
பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..
எனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..?!
கவித கவித....
பதிலளிநீக்கு:)
இனிமையான படைப்பு ...
பதிலளிநீக்குமீட்டி எடுக்கவேண்டும் என்று எண்ணினால் முடியாது ..
தானாகவே இதயம் நிறைப்பும்
@வெளங்காதவன்™, அரசன் சே..
பதிலளிநீக்குமிக்க நன்றி :)