வியாழன், ஜூலை 07, 2011

இது புதுசு...





முதல் படத்துல இருக்கறது இசை இரட்டயர்கள் சபேஷ்-முரளி, அடுத்த படம் தமிழ் நாவல் உலக மன்னர்கள் சுபா, அதெல்லாம் சரி, மூன்றவதா ஒரு படம் இருக்கே.. யாரு பா அது???
வேற யாரு??
நானும் யுவராணி யும் தான்...
சரி அவங்களுக்கும் எங்களுக்கும் ஏனடா சம்பந்தம் னு பாக்க றீங்களா??
நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து காலேஜ் ல (கிளாஸ் அவர்ஸ் ல தான்) எழுதின கவிதை இதோ..
நான் ஒரு வரி, யுவா ஒரு வரி...
அதுக்கு முன்னாடி யுவா வ பத்தி சொல்லனுமே.. அவளை பற்றி ஒரு தனி இடுகை ல சொல்றேன்.. இபோதை க்கு, இரத்தின சுருக்கமா சொல்லணும் னா, யுவா தான் என் உயிர் தோழி, என் ஆலோசகர், என்னை அடிக்கடி ஆறுதல் சொல்லி , அரவணைத்து, தூண்டி விட்டு, அடிக்கடி இன்ப அதிர்ச்சி குடுக்கற என் செல்ல தோழி... அவளுடைய பதிவுகள், http://www.enuyirthuli.blog.com/http://www.tomysweetmom.blog.com/....

இனி எங்க கவிதை..

முத்து முத்தாக சொட்டியது மழைத்துளி - என் காதலை போல..
என் கள்வனவன் அதில் நனைந்து வந்து சிலிர்த்து கொண்டதில் சிதறியது நீர்த்துளிகள்..

அதில் கண்டு கொண்டேன் என் வாழ்கையின் அர்த்தங்களை..
உலகிலுள்ள அனைத்து வண்ணங்களையும் ஒரே துளியில் கண்டேனே..

உன் முழுமையான காதலைத் தாங்கிய அந்த ஒற்றை துளி யை
 ஏந்திட என்னைஅறியாமல் என் தேகம் 
உன்னை நெருங்குவதை நீ அறிந்தாயோ??


என்னை அறியாமல் உன் வசிய வலையில் சிக்கி கொண்டன என் கண்கள்...
குளிரால் சில்லிட்ட என் விரல்களுடன்
 காதலால் வெப்பமான உன் விரல்கள் உரசுகையில் 
மின்சாரம் பாய்ந்தது என் னுள்...

சளைக்காத தென்றலும் - திகட்டாத மழைச்சாரலும் 
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள, சிதறிய தீப்பொறியில்...
பொசுங்காமல் பொசுங்கி மீண்டும் உயிர்தெழுகிறேனே - இனி 
ஒவ்வொரு மழை நாளிலும் உன்னை உருகி உருகி நேசிக்கவே..

கலைந்துள்ள உன் கேசத்தை - நான் 
மீண்டும் கலைக்காமல் கலைத்துவிட 
உன் விழிகள் என்னில் பதிவதை 
ஓரக்கண்னால் பார்த்து விட்டு வெட்கத்தில் மூழ்கி 
நான்  தடுமாறியதை நீ அறிந்தாயோ???

இப்படி எத்தனையோ தடுமாற்றங்கள் என்னுள்..
தடுமாறி தடுமாறி தடுக்கி விழுந்தாலும் 
தாங்கிபிடிக்க நீ இருக்கியே என்ற எண்ணத்தில் 
கோடி முறை தடுமாறி தவிக்கிறேன் நான்..



எதனை தவிப்புகள் என்னுள்??
உன் விழிகளை நேராய் சந்திக்கத் 
தடுமாறிய பொழுதுகள் எத்தனை எத்தனையோ..

அத்தவிப்புகளுக்கு சாட்சியாகத் தானோ விண்மீன்களும் ஆமொதிக்கின்றனவோ..
கலங்கிய என் நெஞ்சு கூட்டில் புகுந்து வரும் உதிரம் தான் கண்ணீராக வெளிப்படுகின்றானவோ...??!!!

****

கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறோமே...

நோட்: திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் யுனிக்ஸ் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பேப்பர்ஸ்.. :)

1 கருத்து: