அவன் டாஸ்மாக்-இல்
சாராயம் குடிக்கிறான் ...
இவள் ஒழுகும் வீட்டில்
புளிச்ச கஞ்சி குடிக்கிறாள்..
அவன் சிகரெட்
புகையில் வாழ்கிறான்...
இவள் அடுப்பு
புகையில் நோகிறாள்...
அவன் வீராப்பில்
மனைவியை அடிக்கிறான்...
இவள் வெறுப்பில்
மகனை அடிக்கிறாள்..
இப்போது சொல்லுங்கள்
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமம் தானே???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக