திங்கள், ஆகஸ்ட் 22, 2011

வணக்கம் தமிழகம்...

சன் டிவி இல் 'வணக்கம் தமிழகம்' னு ஒரு நிகழ்ச்சி வருமே, அதன் நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? எங்க ஊருக்கு வாங்க, நான் நேர்லயே காட்றேன். 
காலைல 5.30 க்கு பால் சொசைட்டி க்கு பால் கொண்டுட்டு போனால், கோவில் திண்ணை, பயணிகள் நிழல்குடை, ஆலமரத்து திண்ணை, வாய்கால் பாலம் நு மேடை ஏதாவது கிடைச்சுறும். முதல் 2 நிமிஷம் எதுவுமே பேசாமல், தொண்டையை செருமிகிட்டு இருப்பாங்க. அப்புறம் பாருங்க, சர வெடி தான்..
பெரும்பாலும் ஆரம்பிக்கின்ற முதல் விஷயம், 'நேத்து மார்க்கெட் ல மஞ்சள் என்ன விலை?', அப்புறம் பால், தக்காளி, தவிடு  னு போய் தங்கம், பெட்ரோல் ல வந்து நிக்கும்.


சும்மா விலையை பத்தி மட்டும் பேசிட்டு விட்ருவாங்க னு நினைக்காதிங்க. பீடி கம்பெனி எது நல்லாருக்கும், யாரு ஒரு நாளைக்கு எத்தனை குடிபாங்கன்னு நிலவரம் பார்த்துட்டு, சந்தைல தக்காளி யார் கிட்ட வாங்கினா நல்லாருக்கும் ஒரு அலசல் நடக்கும்.
அப்புறம், செல் போன். எவ்வளவு போட்டால், இவ்வளவு பணம் (talk value pa) ஏறுது, அதில் கடை காரனுக்கு கமிஷன் எவ்வளவு, யார் யாருக்கு என்ன என்ன, அவன் எப்படி சம்பாதிக்கிறான்'னு கணக்கு போடுவாங்க. வோடபோன் ஓட்டை போன் ஆகறதெல்லாம் இங்க தான்.
அப்புறம், இந்த நிழல் குடை கட்டினத்தில் குத்தகை காரர் எப்படி சம்பாதிக்கிறார் , ஊராட்சி தலைவர் கு என்ன பங்கு, MP, MLA வரைக்கும் கொண்டு பொய், தமிழக முதல்வரையே இழுப்பாங்க. அது கருணாநிதி னாலும் சரி, ஜெயலலிதா  னாலும் சரி, யாரும் தப்ப முடியாது.

அவங்களை விடுங்க, ஒபாமா வே சில சமயம் அல்லாடுவார். அந்த பேச்சு இப்படி ஆரம்பிக்கும், இன்னார் பேரன் போன மாசம் தான் வேளைக்கு போனான் , மாசம் 30,000 சம்பளம் வாங்கறான். அதெப்படி அவங்களுக்கு கட்டுமா? னு ஒரு கேள்வி வரும். அதுக்கு அப்புறம், இன்னார் பையன் அமெரிக்க வில் ஒன்றரை லட்சம் ம் பாங்க. அங்க தான் ஒபாமா அண்ணன் (அண்ணன் வேணாம், சித்தப்பா ) வருவார். அவர் வந்ததினால் வேலை போகுமாம், சம்பளம் குறையுமாம் னு சுவாரஸ்யமா போகும்.
இன்ஜினியரிங் படிச்சுட்டு நம்ம ஊர்ல வேலை கிடைக்காம எந்த பையன் இருக்கான், அவன் படிக்க எவ்வளவு ஆச்சு, நன்கொடை எவ்ளோ குடுத்தாங்க கிறதில் ஆரம்பிச்சு, அந்த கல்லூரி விடுதியில் தோசை சுட மெசின் இருக்கு கிறது வரை பேசுவாங்க. 

அப்புறம் ஒரு 2 நிமிஷம் இடைவேளை. மறுபடியும் தோசை ல வந்து நிக்கும். தோசை சாப்பிட்டா பசி எடுக்கறதில்லை, தேங்காய் சட்னி சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கிறது, டாக்டர் கிட்ட போனால் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க, நு சின்னதா ஒரு புலம்பல். (என்னங்க, எல்லா டாபிக் உம் வந்துருச்சா??)
இன்னைக்கு இது போதும் னு முடிவு பண்ணி, யாரோ ஒருத்தர் எந்திரிபாங்க, அப்படியே கூட்டமும் கலைந்து விடும்.
அப்புறம் என்ன?? நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 'தமிழ் மாலை' தான்..

1 கருத்து: