வியாழன், டிசம்பர் 09, 2010

சிணுங்கல்கள்... ; )

நீ தான் ௮ழைக்கிறாய்
என்று தெரிந்தே சிணுங்குகிறது
என் கைபேசி...

நம் கொஞ்சல்களின் சாரலில்
நனைய கெஞ்சுகிறது ௭ன்னிடம்...

௨ன் அர்த்தமற்ற கேலிகளின்
அர்த்தங்களை அதற்கு எப்படி புரிய வைப்பேன்....???


௭ன்னவனுக்காக…..


உன் கண்களை நேராய் சந்திக்கத்
துடிக்கும் என் கண்கள் - தானாய்
அலைபாயும் உன் முச்சு காற்றை
மிக அருகில் சுவாசித்த உடனே ..

உன் தோள் சேர த்துடிக்கும் என் தோள்கள்
தானாய் தடுமாறும் உன் சட்டை பட்டனை
மிக அருகில் சந்தித்த உடனே..

உன் கை கோர்கத் துடிக்கும் என் கைகள்
தானாய் தடுமாறும் உன் மோதிரத்தின் ஸ்பரிசம்
பட்ட உடனே..

ஏதேதோ பேசத்துடிக்கும் ௭ன் இதழ்கள்
தானாய் தடுமாறும் 'ஏதாவது பேசுடி’
௭ன்று சொல்லும் உன் செல்லத் திட்டலில்..

என் உணர்வுகளோடு போராடி
தினம் தினம் தோற்றுப் போகிறேனே…
நீ மட்டும் எப்படி என்னை வெல்கிறாய் ??? !!

வியாழன், செப்டம்பர் 23, 2010

ஊடகமா? பூடகமா?

பாரதியார் பாடல்கள் கூட
விரசமாகிறது
பனியன் கம்பெனி விளம்பரம்
பார்த்த மாணவனுக்கு...

திரை படங்கள் கூட
வெறுத்து விடுகின்றது
அப்பட நாயகியின்
பேட்டியை கண்ட இளமைக்கு...

உறவுகளின் பெருமை கூட
மறந்து விடுகிறது
நெடுந்தொடர் பார்க்கும்
இல்லத்தரசிகளுக்கு...

புத்தகங்கள் கூட
வெறுமையாகி விடுகின்றது
அதன் அட்டைப் படங்களைக்
கண்ட முதுமைக்கு...

இது தான்
ஊடக உத்தியோ?

திங்கள், நவம்பர் 16, 2009



எனது வலைபக்கத்திற்கு வரவேற்கிறேன்...
வானம் வசப்பட வாழ்த்துகளுடன் .....
சிவா

வாழ்வியலும் அறிவியலும்




கலர் கலராய் பலூன்கள்
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக
உயர உயர பறக்க வேண்டும்
என எண்ணுகிறது ஒரு சமூகம்....

உயர பறக்காமல் சீக்கிரம் விழனும்
இன்னிக்காவது நாலு காசு பாக்கணும்
என எனுகிறது மற்றொரு சமூகம்.....

பூமிபந்தின் மாறுபட்ட சுழற்சிக்கு
இதை விட வேறு என்ன எடுத்துகாட்டு வேண்டும்?

விஷம் எங்கே இருக்கிறது?




'கலி முதி போச்சு'



'எல்லாம் இதுகள பெத்தவங்கள சொல்லணும்'



'வர வர கோவிலுக்கும் வர முடியறது இல்ல'



'இதுக்கு எதாவது சட்டம் கொண்டு வரணும்



''அது தேவை இல்ல, சட்ட சீர்திருத்தம் கொண்டு வரணும்'



* * * * *



அது வேறு ஒன்றும் இல்லை...



விடுமுறை அல்லாத ஒரு நாளில்



என் நான்கு வயது மூத்த அண்ணனோடு கோவிலுக்கு சென்றிருந்தேன்...



மிகவும் எதார்த்தமாக என் நெற்றி குங்குமத்தை சரி செய்தான்...



அதற்கு சாடுகிறதா இந்த சமூகம்?????


வியாழன், ஆகஸ்ட் 20, 2009

விழி மூடி யோசிக்கிறேன் ...

உனக்காகவே வளர்ந்து விட்ட என் விரல் நகங்கள் ...

உனக்கான என் முத்தங்களை சுமந்த நீ தைத்த சட்டையின் பொத்தான்....

என் பிடியில் சிக்கி தவிக்கும் உன் மூச்சு காற்றை சுமந்த என் தலையணை..

குளியல் அறையில் இருந்தும் சமையல் அறையில் இருந்தும் நீ எனக்கு அனுப்பிய ரகசிய குறுந்தகவல்கள் .....

இவை யாவும்
அந்நிய காற்றில் கரையாதிருக்க...
அடிக்கடி சிணுங்கும் என் கைபேசி உன் குரலிலேயே ....

இப்படி நீயும் உன் நினைவுகளும் மாறி மாறி என்னை ஆக்ரமிக்க
அந்நிய தேசத்தில் என்ன செய்வேன் நான் ??????