சனி, அக்டோபர் 29, 2011

விளம்பரங்களில் வாழ்க்கை

ஒரு நகரம் வண்ணமயமாக செழிப்பாக இருப்பது தான் அந்த நகரத்தின் அழகே. எங்கள் ஈரோடு மாநகரில் அந்த செழிப்பும் வண்ணமும் இருக்கிறது என்று பெருமை கொள்கிறேன்.

       'எங்கு நோக்கினும் சக்தியடா' என்பது போல், எங்கு நோக்கினும் விளம்பரத்தட்டிகள். புதிய வரவு சீரியல் முதல் பள்ளிக்கூடம் வரை, ப்ளெக்ஸ் தட்டிகளில் தங்கள் அருமை பெருமைகளை விவரிக்கின்றன.

இப்போதெல்லாம் பேருந்துப் பயணங்களில் புத்தகம் படிப்பதை விடவும் விளம்பரங்களை வேடிக்கை பார்ப்பது என் விருப்பமான பொழுது போக்காகிவிட்டது.

    உங்கள் விருப்பமான நடிகர் அறிமுகப்படுத்தும் செல்போன், வீரர்களின் பைக் சாகசங்கள், விளையாட்டு வீரர்களின் கையெழுத்து சிபாரிசோடு வரும் ஊட்டச்சத்து பானங்கள், நடிகைகள் கொண்டாடும் பட்டுபுடவைகள். இவை அத்தனையும் தாண்டி விளம்பரங்களில் ரசிப்பதற்கு ஓர் விஷயம் உள்ளது. 'குழந்தைகள்'.

முன்பு இருந்ததை விட, இப்போதெல்லாம் விளம்பர உத்திகள் மாறி விட்டன. இட்லி பொடி முதல் TMT கம்பிகள் வரை குழந்தைகள் ராஜ்ஜியமே. 'கறை நல்லது தானே?' என்ற கேள்விகளிலும், 'நான் ரொம்ப பிஸி' என்ற பெரிய மனுஷ தனத்திலும், 'மெசினிற்கு கை ஒட்ட வைக்கும்' சாமர்த்தியத்திலும், 'அப்படியே சாப்பிடுவேன்' என்ற சுட்டித்தனத்திலும், உலகின் அத்தனை அழகும் குழந்தைகளிடமே என்று பொறாமை கொள்ள வைக்கின்றன. அதுவும் CBSE பள்ளி விளம்பரங்களில் குட்டியூண்டு டாக்டர், எஞ்சினீயர் எல்லாம் கொள்ளை அழகு.


ஆனால், இந்த விளம்பரங்களில் தான் எத்தனை முரண்பாடுகள்? 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' விளம்பர தட்டிக்கு அருகில் தான் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் விளம்பரங்கள்,கோவில் கும்பாபிஷேக அறிவிப்பு போஸ்டர் களும் ஆபாச பட போஸ்டர் களும் ஒரே சுவற்றில் தான் ஒட்டப்படுகின்றன. 1 ரூபாய் அரிசி விற்கும் அதே தெருவில் தான் organic அரிசி கிலோ 45 என்று விற்பனை ஆகிறது. 

'விபத்தா? உடனடி சேவை' என்ற அரிமா சங்க விளம்பரம் துரு பிடித்த இரும்பு போர்டிலும், மித மிஞ்சிய திறன் கொண்ட புதிய அறிமுக பைக் கின் அறிவிப்பு  பிரமாண்டமாயும் இருக்கின்றன.

நீங்களே கவனித்து பாருங்களேன். காச நோய்க்கோ, தொழு நோய்கோ இலவச சிகிச்சை என்று ஆரம்பிக்கும் விளம்பர அறிவிப்புகள், ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு, 999 ரூபாய்க்கு செல்போன், 777 ரூபாய்க்கு branded சட்டை, 555 ரூபாய்க்கு பட்டுபுடவை, 111 ரூபாய்க்கு முழு டாக்டைம் அன்று பல கதைகள் சொல்லும்.



'ஐ லவ் யு ரஸ்னா' வில் தொடங்கி, 'ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்' என்று சக்கை போடு போடுபவை சந்தேகமே இன்றி தொலைகாட்சி விளம்பரங்கள் தான். ஒரு 15 நிமிட இடைவெளியில் நமது பல வருட கனவுகளை ஆசை காட்டி விட்டு செல்லும். 1.5 லட்சங்களில் ஆரம்பிக்கும் சொகுசு கார்கள், 3000 களில் ஆரம்பிக்கும் தொடு திரை கை பேசிகள், 19,999 களில் வைர ஆபரணங்கள், மாடுலார் சமையல் அறைகள், சீறிப்பாயும் பைக்குகள், சில லட்சங்களில் காலி மனைகள், பல லட்சங்களில் குடியிருப்புகள், வெளிநாட்டு முதலீடுகள், படிப்புகள்.... இப்படி எண்ணற்றவை. இவை ஒவ்வொன்றும் சராசரி இந்திய குடி மகனின் கனவுகள்.

தொலைகாட்சி விளம்பரங்களை விட வானொலி விளம்பரங்கள் சுவாரசியமானவை.பெரும்பாலும் இவை ஏதேனும் திரைப்பட பாடல் மெட்டுக்களாக இருக்கும். அந்த இசை அமைப்பாளரே வந்து மெட்டு போட்டது போல இருக்கும். மிக சாதாரணமான கணவன்,  மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள், இளசுகளின் பகிர்வுகள், இப்படி எதோ ஒன்றை வைத்தே அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி விடுவார்கள். 

'வாங்கிடீங்களா வாங்கிடீங்களா மான் மார்க் சீயக்காய் தூள்'

'குஷியான சமையலுக்கு ருசியான சங்கு மார்க் இட்லி பொடி'

'வகை வகையா சாபிடலாம் வயிறு நிறைய சாப்பிடலாம்' 

இதெல்லாம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கும் வாசகங்கள்.

சில சமயம் இந்த விளம்பரங்கள் கூட நம்மை கடுப்பேற்றும். கொஞ்சம் ஊன்றி கவனியுங்களேன், நிச்சயம் ஒவ்வொரு விளம்பரங்களிலும் ஒரு சின்ன ஏக்கம், குட்டியூண்டு எதிர்பார்ப்பு, பளிச் கற்பனை, நிறைய சந்தோசம், பொங்கும் உற்சாகம் என நிச்சயம் நிரம்பி இருக்கும்.



வெள்ளி, அக்டோபர் 14, 2011

இவ்வளவு தான் வாழ்க்கையா..?!

வாழ்க்கை - சந்தோஷமாக ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உற்சாகம் குன்றாமல் வாழவேண்டியது. சுதந்திரத்தில் பறவையாகவும் பொருள் தேடலில் எறும்புகள் போலவும், அனுபவித்தலில் வீட்டு செல்லப் பிராணிகள் போலவும் நாம் வாழும் வாழ்க்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்ன??

பள்ளிக்காலம் முழுக்க பெற்றோருக்காக, கல்லூரி காலம் முழுக்க வேலைக்காக , பின் எஞ்சி யுள்ள காலம் முழுவதும்?! -  பணத்திற்காகவா??
எதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் நம்மை  வைத்து நம்மை யறியாமல் நம் திறமைகளை உறிஞ்சி பல லட்சங்களை சம்பாதிக்கிறது. அந்த லட்சத்திலிருந்து கிடைக்கும் ஒற்றை இலக்க சதவிததிற்காகவா  இரவும் பகலும் அல்லாடுகிறோம்?


ஆயிரங்களில் சம்பாதித்து படித்த முதலை எல்லாம் எடுத்து பின் அந்த ஆயிரங்களை லட்சமாக்கி அந்த லட்சங்கள் கோடிகளை எட்டும் வரை கண் மூடி உழைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் போது நரையோடிக்கொண்டிருக்கும். எஞ்சி நிற்பதென்னவோ வருமான வரி கழிவிற்காக நாம் போட்டு வைத்திருந்த காப்பீடுகளும் முதலீடுகளும் தான்.

மகிழ்ச்சி என்பது வார இறுதியில் போகும் சினிமா விலோ , பொழுது போக்கு  பூங்காவிலோ, மாத  இறுதியில் போகும் பார்ட்டி யிலோ கிடைக்காது. ஏறத்தாழ இன்று அனைவரும் ஆர்பரிபிலேயே குதூகலம் அடைகின்றனர். மிரட்டும் ஒளி விளக்குகள்,  இரைச்சல் இசை, நவ நாகரிக கூட்டம், மற்றும் பல. அதில் நிறைவடைகிறதா உங்கள்  மனம்? அதிகாலை தலை வலியும், அடித்துப் போட்ட உடலுமே மிச்சம். இது  ஏதோ இன்றைய (நவ நாகரிக) சாமியார்களின் பிரசங்கம் மாதிரி இருக்கிறது என எண்ண வேண்டாம். உண்மையில் அவர்கள் கூறுவது போல, தேடல் தான் வாழ்க்கை. ஆனால் அது ஒரு போதும் பணத்தேடலாகி விடக் கூடாது.


அதிகாலை மங்கிய வெளிச்சத்தில், நிறைவாக ஒரு நடை, அவ்வப்போது எடுத்து பார்க்க நம்பர்களின் நினைவுகள் கிறுக்கல்களாக, பார்த்து பார்த்து செய்யும் உணவுகள், மிதவேகத்தில் ஊர்ந்து செல்லும் பயணங்கள், நம் பார்வையிலேயே நம்  ஸ்பரிசத்திலயே வளரும் வீட்டு செடிகள், அவசரமின்றி கிளம்பும் திங்கட்கிழமை, ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளிக்கிழமை கோவில் மணி ஓசைகள், கைக்குட்டையில் நாமே போடும் தையல் பூக்கள், அறைக்கதவில் ரசனையோடு நாம் வரைந்திருக்கும் ஓவியங்கள், தினசரி யில் வரும் பொன் மொழிகள், கவிதைகள், நாள் பழங்கள், விளம்பரங்களில் வரும் குழந்தைகளின் கொஞ்சு மொழிகள், ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள், அனுபவித்து செய்யும் வீட்டு வேலைகள், ரசித்து செய்யும் வீட்டு அலங்காரங்கள், அடிக்கடி நினைவு கூறும் பழைய புகைப்படங்கள், வயதானவர்களோடு பேசும்போது நமக்கே அந்நிய மாகி விடும் நம் உரக்கப்பேச்சுகள், 'அட' போட வைக்கும் குழந்தைகளின் பெரிய மனுஷத்தன மான பேச்சுகள், வாவ் சொல்ல வைக்கும் சாலை ஓர பூக்கள், எண்ணற்ற  ஆச்சர்யங்கள் இருப்பது தானே வாழ்க்கை??


இப்போதெல்லாம், நம் விருப்பங்களை விட நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பங்களையே மதிக்கிறோம், உடை விஷயத்திலும் சரி, கொண்டாட்டங்களிலும் சரி.ஏதோ ஒரு உடை அது நமக்கு பிடிக்காவிடினும் 'Trend' என்ற பெயரில் அதையே நமது விருப்பமாக்கிகொள்கிறோம். இங்கே தான் நம் விருப்பத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுகிறது.

 அந்த இடைவெளியில் தான் ஊடகங்கள் நுழைந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய சமயங்களில் விளம்பரங்களின் பின்னே நாம் ஓடுகிறோமா? என்ற எண்ணம் தோன்றும். எது எப்படியோ, நொடி முள்ளோடு ஓடாமல், இனியேனும் மணி முட்களோடு ரசித்துக்கொண்டே துரத்தி விளையாடலாம்.. நான் மிகவும் ரசித்த விளம்பரத்தில் வரும் வாசகம், முத்தாய்ப்பாக, 

" How much you earn should not decide how much you smile! "

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பத்து வயது குழந்தையாக விழைகிறேன்..

கல்லூரி படிக்கும் எந்த இளவட்டத்தையாவது உங்கள் பொழுது போக்கு என்ன என்று கேட்டால், "Reading books, Browsing, Hearing music" னு சீன் போடுவாங்க. தம்பி, ரெசுமே கு எல்லாம் கேக்கல, பொதுவா சொல்லுப்பா' னா, "படம் பாப்போம், கிரிக்கெட் விளையாடுவோம், தூங்குவோம், போன் கடலை, மெசேஜ் கடலை" னு சொல்வாங்க. இப்ப இருக்கின்ற குழந்தைகளை கேட்டால், "activity note' இல் picture ஒட்டுவோம், Play station இல் விளையாடுவோம், CNN பாப்போம்" னு சொல்வாங்க. நான் 10 வயச இருக்கும் போது எங்க உலகமே வேற. சரியான எடக்குநாட்டான் னு நினைக்காதிங்க. எங்க உலகத்திலயும் Amusement park, Activity book... எல்லாமே இருந்துச்சு.. 

இப்பவெல்லாம் பொம்மை களுக்கு கூட brand name பார்த்து தான் வாங்கறோம். அனால், எங்க brand எப்பவுமே களிமண், மணல் தான். ஆனால், நாங்க பீச் ல பொய் மக்(mug) எல்லாம் வச்சு விளையாண்ட தில்லை. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர் வச்சு இட்லி சுட்டிருக்கிறோம், அதில் கோவைப் பழங்கள், மணத்தக்காளி பழங்கள் வைத்து ரசனையோடு பரிமாறி உள்ளோம். 


நெல் வயல் சேற்று மண்ணைப் பதப்படுத்தி, பிசைந்து, அம்மி, செக்கு, அண்டா, குண்டா என எல்லாமே செய்வோம். சட்டை எல்லாம் சேறு குழப்பி, கை கால் எல்லாம் மண் படிந்து, 'கோவேறு கழுதை' என திட்டு வாங்கிய காலமெல்லாம்,  'Short-term memory loss' வந்த கூட மறக்காது.

இந்த செற்றைஎல்லாம் மோட்டார் தண்ணியில் கழுவி, ஒரு அரை மணி நேரம் ஆட்டம் போட்டு விட்டு கிணற்றில் குதிப்போம். அங்க தான் எங்க ஊரு வாண்டுகள் கூடமே இருக்கும். சுரை புருடை, கயிறு கட்டி பழகு கின்ற கூட்டம், புதுசா நீச்சல் கத்துக்கிட்டு ஒரு ஓரமா நீச்சல் அடிக்கின்ற ஒரு கூட்டம், ஒரு சில எக்ஸ்பேர்ட்ஸ் உயரமான இடத்திற்கு பொய் சாகசம் எல்லாம் பண்ணி வித்தை காட்டுவாங்க. கிட்டதட்ட 2 மணி நேரம், உடம்பெல்லாம் வெளுத்து, விறைத்துப் பொய், கினத்துக்கரர் வந்து திட்டவும், கூட்டம் கலைந்து விடும். வீட்டுக்கு பொய் பழைய சோறில் மோர் கரைத்து வெங்காயம் கடித்து 2-3 டம்ளர்  குடிச்சிட்டு ஆசுவாசமா கட்டில்'ல படுத்துட்டு கொஞ்ச நேரம் டிவி பாப்போம். டிவி னா CNN, Disney லாம் இல்லைங்க, DD1 ல புரியாத பாஷை ல ஏதோ நாடகம் போட்ருப்பான், அதை ஒரு அரை மணி நேரம். அதுக்குள்ள எங்க செக்கு, அம்மி எல்லாம் காய்ந்துருக்கும். அதை எல்லாம் மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டியில் போட்டு பத்திரபடுத்தி விட்டு, அதுக்கு மேல் ஒரு பழைய சாக்கை போட்டு, எவருக்கும் சந்தேகம் வராத படி , நைசாக நழுவி விடுவோம். 

பின், தென்னந் தோப்பிலோ, அல்லது ம மாற நிழலிலோ கட்டில் போட்டு பழைய நோட்டு, கதை புத்தகங்கள், கொண்டு பொய், சிவப்பு பேனாவில், டிக் போட்டு விளையாடுவோம், அதுவும் மிஸ் மாதிரி கையெழுத்து எல்லாம் போட்டு பாப்போம். அதுவும் போர் அடிச்ச, இலையை காய வச்சு, பழைய சோறு போட்டு நோட் ல ஒட்டி கலர் கலர் ஆ கோலம் போட்டு வச்சுப்போம். வீட்டுக்கு வரும் லெட்டர் இன் ஸ்டாம்ப், கடலை மிட்டாயில் வரும் சாமி படம், ஆசை மிட்டாய் காகிதம், பென்சில் சீவி வர இறகு, கோழி இறக்கை, ஐஸ் கிரீம் குச்சி, செய்தித்தாள் நிகழ்வுகள் னு ஏகப்பட்ட activities செய்வோம். அதையெல்லாம் ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட காட்டி குட் வாங்குறதுல அவ்ளோ சந்தோசம் !!!


சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் செய்து பாருங்கள் எல்லாம் செஞ்சு பார்த்து வீட்டில் அங்கங்கே ஒட்டி திட்டு வாங்குவ தெல்லாம் நினைத்தால் இன்னும் சிறு பிள்ளை யை மாறிடத் தோனும். 

தென்னங்கீற்றில் கடிகாரம் செய்து கடிக்கிறது, இளநீர் ல பப்பாளி தண்டு போட்டு உறிஞ்சுவது, நுங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓடுவது, டியர் இல் தூரி கட்டி விளையாடுவது.. இப்படி நான் அனுபவிச்ச விஷயங்கள் எத்தனை எத்தனையோ..

சனி, அக்டோபர் 01, 2011

பலப்பம் முதல் பேஸ்புக் வரை..

'பலப்பம்' என்றதும் குழம்ப வேண்டாம். பலப்பம் னா சிலேட் பென்சில். சிலேட் டில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தொடங்குகிறது, மொழியோடு நாம் கொண்டிருக்கும் பயணம்.(பள்ளி  செல்லும் குழந்தைகளிடம் கூட இப்பவெல்லாம் சிலேட் இல்லைங்க. சிலேட் பென்சில் இருக்கான்னு கேட்டுப் பாருங்க. HB ஆ?? 2 HB ஆ? னு கேட்பாங்க.  )
 'A','B','அ','ஆ' என்று ஒற்றை எழுத்தில் தொடங்கிய நம் எழுத்துக்கள், இன்னும் ' ',' ',' ' என்று வளராமலேயே இருக்கிறதா? அல்லது வளர்ந்து முதிர்ந்து விட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.



'வணக்கம்!! நல்லாருக்கிறீங்களா ? வீட்டில் எல்லோரும் சவுக்கியமா? அப்புறம், எப்படி போய்க்கொண்டிருகிறது வாழ்க்கை??' என்று உறவு கொண்டாடிய கரிசனமான உபசரிப்புகளை 'whats up??' என்ற இரு வார்த்தைகளாய் சுருக்கி, அதையே 'watz ap?' என்று அர்த்தமே இல்லாமல் உருக்கி விட்டோம்.

வார்த்தைகள் மட்டுமா சுருங்கி விட்டன? வாழ்க்கையும் தான். பிறந்த நாளில் இருந்து, பொங்கல், தீபாவளி வரை வாழ்த்துக்கள் எல்லாம் இணையத்திலே தான். குறுந்தகவல்கள் கூட சோடை பொய் விட்டன. இணையத்தில் வாழ்த்துக்கள் தட்டச்சு செய்வது கூட இப்போதேல்லாம் குறைந்து விட்டன. பேஸ்புக் இல் like, ட்விட்டரில் share, கூகுளில் +1 என்று ஒரு சொடுக்கில் எல்லாம் முடிந்துவிட்டது. இதுவேண்டுமானால், இணையத்தின் வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால், வாழ்க்கையின் வீழ்ச்சியே!!


3 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 150 ரூபாய் வரை வாழ்த்து அட்டைகள் வாங்கி பொங்கல் பானை, கரும்பு, கோலம் எல்லாம் வரைந்து 'பொங்கல் வாழ்த்துக்களை' வித விதமாக எழுதி இப்படிக்கு என்று ஒரு லிஸ்ட் ஐயே எழுதி        கடைசியில் உறையில்  'Open with Smile :) ' என்பதை மறக்காமல் குறிப்பிட்டு பல விதமான தபால் தலைகள் வாங்கி, தாமதமாகி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கையோடு தலைமை தபால் நிலையத்திற்கே சென்று அனுப்பிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.

அதுவும் தீபாவளி என்றால் இன்னும் குதூகலம்.வாழ்த்து அட்டைக்குள் சுருள் கேப் வைத்து அனுப்பி அடித்த லூட்டிகள் எல்லாம் பல. தீபாவளி க்கு பட்டாசு வாங்குவதில் ஆரம்பிக்கும், நண்பர்களுக்கும்  நமக்கும் இடையேயான போட்டி. 
அவனிடம் இல்லாத மாதிரி பட்டாசு வாங்க வேண்டும் என்று கடை கடையை ஏறி, மூலை முடுக்கெல்லாம் துலாவி வாங்கி வந்தால், பக்கத்து வீடு பட்டாசு சத்தம் ஊருக்கு வெளியே வரும் போதே கேக்கும். நமக்கு அப்படியே பக்குன்னு ஆய்டும்.

அவசர அவசரமாக பட்டாசு களை பிரித்து வைத்து வெளியே வெயிலில் காய வைத்து, 3 நாளைக்கு தேவையானவற்றை பிரித்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அப்புறம், போட்டி போட்டுக்கொண்டு பட்டாசுச் சத்தம் விண்ணை பிளக்கும். போட்டி எல்லாம் முதல் நாள் மட்டும் தான், அப்புறம் என்ன, தேர்தல் கூட்டணிக் கட்சிகள் மாதிரி ஒன்னுசெந்துட்டு அடிக்கிற ரவுசு இருக்கே!! இது தாங்க நெஜ தீபாவளி...



எப்படியும், தீபாவளி க்கு 5 நாள் லீவ் வரும். அம்மாய் வீட்டில் சிக்கன் , மட்டன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தேம்பாய் பேச ஆயிரம் கதைகள் இருக்கும்..

இப்பவெல்லாம் பேஸ்புக் தீபாவளி தான். 2 நாள் லீவ் ல் 'Am going home town 4diwali.. happy diwali guys..' னு Status போட்டுட்டுபோனோம் னா, மத்தாப்பு பிடிக்கிற மாதிரி 4 போட்டோ எடுத்து போட்டுட்டு, ஷங்கர் பேட்டிய பார்த்துட்டு ட்வீட் பண்ணிட்டு , புது ரிலீஸ் படம் பாத்துட்டு, நல்ல சாப்டுட்டு லீவ் முடிஞ்சு status அப்டேட் போடுவோம், "d most wonderful day, dude!! bac 2 wrk'.. அதையும் 10 பேர் like பண்ணுவாங்க.. 

முடியல ங்க.. :(